தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் நம் முன்னோர்கள் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவே கடைபிடித்து வந்தனர்.
அதிலும் புரட்டாசி மாதம் வைணவ கடவுள் பெருமாலுக்கு உரிய மாதமாக கொண்டாடப்பட்டுவருகிறது. காரணம் மாதங்களில் நான் மார்கழி என கண்ணபிரான் சொன்னாலும் அவரின் மூலாவதாராமான பெருமால் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தில் பூலோகத்தில் மனித உரு தாங்கி பிறந்தவர் என்பதால் புரட்டாசிக்கு அப்படி ஒரு சிறப்பு. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
புரட்டாசியில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே கடைபிடித்து பக்தர்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
ஜோதிடத்தில் மகரம் கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவும், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதியாகவும் பெருமால் விளங்குகிறார்.
இந்த அமைப்பு கொண்டவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது மிகவும் நல்லது.
பெருமாளை நாம் ஏன் வணங்க வேண்டும்? வணங்கினால் என்ன கிடைக்கும் என பல விடயங்கள் இந்த வீடியோவில்.. முழுமையாக பாருங்கள்.