ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது இன படுகொலைகளின் எஞ்சியுள்ள சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடு என சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்ணம் சுகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சிகள் அழிந்துகொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்னம் சுகாஸ், அதற்கு இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.