நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அதிகளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரை இரும்புப் பெண் எனவும் பலரும் அழைத்தனர்.
இந்த நிலையில், இலங்கை மாற்று அணியின் ஜனாதிபதி வேட்பாளராக டில்ருக்ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.