யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள புகையிரத கடவைக்கு அருகாமையில் மிதிவெடி ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது..
இன்று காலை (3) மிதிவெடி ஒன்று இருப்பதாக பொது மக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் மிதிவெடியை மீட்டுள்ளனர்..
அந்த பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருந்தமையினால் மறைந்து கிடந்த மிதிவெடி மழை காரணமாக தெரிந்துள்ளது.
எவ்வாறு இந்த பகுதியில் மிதிவெடி வந்ததென்பது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.