எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப் பகுதியில் நேற்றைய தினம் முதல் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருகின்ற தீயினால் 7 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாரோ விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


