நாடளாவிய ரீதியில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி விடுமுறையாகவும் இருக்கின்றது.
அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.