நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து அவரது செயலாளரான பிரியத் பந்துவிக்கிரமவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.