மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கம்பஹா − மிரிஸ்வத்த பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த 5 பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.