கொவிட் தடுப்பூசியை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் போட்டுக் கொண்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் எப்போது தடுப்பூசிகளை போட்டுக் கொள்வர் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
எனினும் இருவரும் எப்போது தடுப்பூசியை போட்டனர் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.ஆனாலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி பெற்றதை உறுதிப்படுத்தினார்.